கோப்பாய் பலானைபதியில் ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து கூழாவின் அடியில் காட்சியை அளித்து
கோயில் கொண்ட கண்ணகைத்தாய்க்கு இன்று [01.08.2014] வெள்ளிக்கிழமை
அலங்கார உற்சவத்தின் மாலைப்
பூசையின் போது தாயவள் வெளிவீதி வலம் வரும் காட்சிகள்.
கோப்பாயில் அமைந்துள்ள ஆலயங்களில் மிக புராதனமானதும் வரலாற்றுப்பெருமை கொண்டதுமான கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் இணையத்தளத்தின் ஊடாக தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்
எம்மைப்பற்றி யாழ்ப்பாணமாவட்டம் கோப்பாய்க் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற பலானை கண்ணகை அம்மன் ஆலய இணையத் தளம் ஒன்றினை உலகெங்கும் பரந்து வாழுகின்ற கண்ணகி அடியார்களின் முன் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இணையத்தளத்தின் மூலமாக பலானை கண்ணகை ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் அவ்வப்போது தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை உலகெங்கும் பரந்து வாழும் அடியார்கள் பார்த்துப் பயனடையலாம். மேலும் இவ் இணையத்தளமானது வெளிநாடுகளில் வாழுகின்ற அடியார்களதும் ஆலயத்திற்கு வரமுடியாதவர்களின் நன்மைகள் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணகை அம்மன் பக்தர்கள் எங்கிருந்தாலும் தாயவளின் அழகிய வதனத்தையும் அருட்கடாச்சத்ததையும் பெற்று சகல சிறப்புடன் நோயற்ற வாழ்வு வாழ பிராத்திப்போமாக. |
ஆலய தரிசனம் கோடி புண்ணியம்
அம்மன் தரிசம் ஆத்ம புண்ணியம்.
|
கடும் முயற்சி உங்களுக்கு வெற்றி தரும். நீங்கள் வெற்றி பாதையில் வீறுநடை போட எல்லாம் வல்ல கண்ணகை தாய் உங்களுக்கு அருளாசி வழங்குவாராக. |
Post a Comment