Latest Post
எம்மைப்பற்றி யாழ்ப்பாணமாவட்டம் கோப்பாய்க் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற பலானை கண்ணகை அம்மன் ஆலய இணையத் தளம் ஒன்றினை உலகெங்கும் பரந்து வாழுகின்ற கண்ணகி அடியார்களின் முன் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இணையத்தளத்தின் மூலமாக பலானை கண்ணகை ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் அவ்வப்போது தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை உலகெங்கும் பரந்து வாழும் அடியார்கள் பார்த்துப் பயனடையலாம். மேலும் இவ் இணையத்தளமானது வெளிநாடுகளில் வாழுகின்ற அடியார்களதும் ஆலயத்திற்கு வரமுடியாதவர்களின் நன்மைகள் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணகை அம்மன் பக்தர்கள் எங்கிருந்தாலும் தாயவளின் அழகிய வதனத்தையும் அருட்கடாச்சத்ததையும் பெற்று சகல சிறப்புடன் நோயற்ற வாழ்வு வாழ பிராத்திப்போமாக. |
ஆலய தரிசனம் கோடி புண்ணியம்
அம்மன் தரிசம் ஆத்ம புண்ணியம்.
|
தேர்த்திருவிழா
கண்ணகைத்தாய் தேர் ஏறி பவணிவரும் காட்சிகள்.................
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் உறைகின்ற தாயே!
நின் தேர்ஏறிவரும் காட்சியை கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை.
உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே!
என் அம்மையே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். என் கண்ணகை தாயே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் உறைகின்ற தாயே!
நின் தேர்ஏறிவரும் காட்சியை கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை.
உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே!
என் அம்மையே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். என் கண்ணகை தாயே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
ஏழாம் திருவிழா
கண்ணகை அம்மன் ஏழாம் திருவிழா [07.08.2014] காலைநேர உற்சவத்தின் போது அம்மன் ஏழாம் திருவிழா உபயகாரப்பெருமக்களால்
ஆலயத்திற்க்கு புதிதாக செய்து வழங்கப்பட்ட அன்ன வாகனத்தில் எழுந்தருளியும் மாலைநேர உற்சவத்தில்அம்பாள் சிறப்பாண அலங்காரத்துடன் முத்துச்சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு நல் அருள் வழங்கினாள்
முதலாம் உற்சவம்
கோப்பாய் பலானைபதியில் ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து கூழாவின் அடியில் காட்சியை அளித்து
கோயில் கொண்ட கண்ணகைத்தாய்க்கு இன்று [01.08.2014] வெள்ளிக்கிழமை
அலங்கார உற்சவத்தின் மாலைப்
பூசையின் போது தாயவள் வெளிவீதி வலம் வரும் காட்சிகள்.