கோப்பாயில் அமைந்துள்ள‌ ஆல‌ய‌ங்க‌ளில் மிக‌ புராதன‌மான‌தும் வ‌ர‌லாற்றுப்பெருமை கொண்ட‌துமான கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் இணையத்தளத்தின் ஊடாக தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Featured Post Today
print this page
Latest Post
எம்மைப்பற்றி
யாழ்ப்பாணமாவட்டம் கோப்பாய்க் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற பலானை கண்ணகை அம்மன் ஆலய இணையத் தளம் ஒன்றினை உலகெங்கும் பரந்து வாழுகின்ற கண்ணகி அடியார்களின் முன் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இணையத்தளத்தின் மூலமாக பலானை கண்ணகை ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் அவ்வப்போது தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை உலகெங்கும் பரந்து வாழும் அடியார்கள் பார்த்துப் பயனடையலாம்.

மேலும் இவ் இணையத்தளமானது வெளிநாடுகளில் வாழுகின்ற அடியார்களதும் ஆலயத்திற்கு வரமுடியாதவர்களின் நன்மைகள் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணகை அம்மன் பக்தர்கள் எங்கிருந்தாலும் தாயவளின் அழகிய வதனத்தையும் அருட்கடாச்சத்ததையும் பெற்று சகல சிறப்புடன் நோயற்ற வாழ்வு வாழ பிராத்திப்போமாக.

ஆலய தரிசனம் கோடி புண்ணியம்
அம்மன் தரிசம் ஆத்ம புண்ணியம்.

பூங்காவனம் காணொளிவாயிலாக

பூங்காவனம் காணொளிவாயிலாக
0 comments

தீர்த்த திருவிழா காணொளிவாயிலாக

தீர்த்த திருவிழா காணொளிவாயிலாக
0 comments

பூங்காவனம்

புண்ணியப்பதி கோவைத் தாய் கண்ணகையம்மை பூங்காவனம் காணவாரீர்!!
0 comments

தீர்த்த திருவிழா


0 comments

தேர்த்திருவிழா காணொளிவாயிலாக

கண்ணகைத்தாய் தேர் ஏறி பவணிவரும் காட்சிகள் காணொளிவாயிலாக......

கோப்பாய்க் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற பலானை கண்ணகைத்தாயின் ரதஉற்சவத்தின் போது படம்பிடிக்கப்பட்டகாட்சிகள் உயர்தரமான காணொளியாக தரப்பட்டுள்ளது.

இவ்இணையத்தளத்ததை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவும்.

0 comments

தேர்த்திருவிழா

கண்ணகைத்தாய் தேர் ஏறி பவணிவரும் காட்சிகள்.................
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் உறைகின்ற தாயே!
நின் தேர்ஏறிவரும் காட்சியை கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை.
 உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே!
என் அம்மையே!  ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம்.  என் கண்ணகை தாயே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.

0 comments

எட்டாம் திருவிழா

0 comments

ஏழாம் திருவிழா

கண்ணகை அம்மன் ஏழாம் திருவிழா [07.08.2014] காலைநேர உற்சவத்தின் போது அம்மன்  ஏழாம் திருவிழா உபயகாரப்பெருமக்களால் ஆலயத்திற்க்கு புதிதாக செய்து வழங்கப்பட்ட அன்ன வாகனத்தில் எழுந்தருளியும் மாலைநேர உற்சவத்தில்அம்பாள் சிறப்பாண அலங்காரத்துடன் முத்துச்சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு நல் அருள் வழங்கினாள்


0 comments

ஆறாம் திருவிழா

வீதி தனில் பவனிவந்து பக்தர் குறை தீர்த்தருளும் எங்கள் கண்ணகை தாயே ... பகை ஓட்டி ..பாடம் புகட்ட இந்த பாரினிலே அருள்வாய் அம்மா .
கண்ணகைத்தாயின் ஆறாம் திருவிழாவின் காட்சிகள்.


0 comments

ஐந்தாம் திருவிழா

இலங்கையின்வடபால் யாழ்ப்பாணமாநகரின் கோப்பாய் பலானைபதியில் ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்புரியும் ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீ கண்ணகா பரமேஸ்வரி அம்மைக்கு இன்று [05.08.2014] செவ்வாய்க்கிழமை 5 ம் திருவிழா சிறப்புறநடைபெற்றது .
[காலை கைலைக்காட்சி,,,/மாலை -திருமஞ்சத்திருவிழா]
1 comments

நான்காம் திருவிழா

கோப்பாய் பலானைபதியில் வீற்றிருந்து அருள்புரியும் கண்ணகை தாயின் நான்காம் திருவிழாவின் போது.
1 comments

மூன்றாம் நாள் உற்சவம்

மாலைநேர வழிபாட்டு நிகழ்வுகளின் போது விண்ணக தேவர்கள் பூ மாரி பொழிய விசேட மங்கள வாத்தியங்களுடன் காமதேனுவில் காட்சியளித்த கண்ணகை தாய். வெளி வீதி வலம் வரும் காட்சி.

0 comments

இரண்டாம் நாள் உற்சவம்

கோப்பாய் பலானைபதியில் வீற்றிருந்து அருள்புரியும் கண்ணகை தாயின்  இரண்டாம் நாள் திருவிழாவின் போது.  [02.08.2014சனிக்கிழமை  
0 comments

முதலாம் உற்சவம்

கோப்பாய் பலானைபதியில் ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து கூழாவின் அடியில் காட்சியை அளித்து 
கோயில் கொண்ட கண்ணகைத்தாய்க்கு  இன்று  [01.08.2014] வெள்ளிக்கிழமை  
அலங்கார உற்சவத்தின் மாலைப்
பூசையின் போது தாயவள் வெளிவீதி வலம் வரும் காட்சிகள்.
0 comments
 
பலானையில் வீற்றிருக்கின்ற அம்மனது ஆலயத்தின் வளர்ச்சிக்கு திருப்பணி நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் ஆலய நிர்வாக சபை பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
Copyright © 2014. kopay palanai kannakai amman kovil - All Rights Reserved