கண்ணகைத்தாய் தேர் ஏறி பவணிவரும் காட்சிகள்.................
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் உறைகின்ற தாயே!
நின் தேர்ஏறிவரும் காட்சியை கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை.
உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே!
என் அம்மையே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். என் கண்ணகை தாயே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் உறைகின்ற தாயே!
நின் தேர்ஏறிவரும் காட்சியை கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை.
உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே!
என் அம்மையே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். என் கண்ணகை தாயே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
முதலாம்திருவிழா | இரண்டாம் திருவிழா | மூன்றாம் திருவிழா |
நான்காம் திருவிழா | ஐந்தாம் திருவிழா | ஆறாம் திருவிழா |
ஏழாம் திருவிழா | எட்டாம் திருவிழா | தேர்த்திருவிழா |
தீர்த்த திருவிழா |
Post a Comment