கோப்பாயில் அமைந்துள்ள‌ ஆல‌ய‌ங்க‌ளில் மிக‌ புராதன‌மான‌தும் வ‌ர‌லாற்றுப்பெருமை கொண்ட‌துமான கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் இணையத்தளத்தின் ஊடாக தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

எம்மைப்பற்றி
யாழ்ப்பாணமாவட்டம் கோப்பாய்க் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற பலானை கண்ணகை அம்மன் ஆலய இணையத் தளம் ஒன்றினை உலகெங்கும் பரந்து வாழுகின்ற கண்ணகி அடியார்களின் முன் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இணையத்தளத்தின் மூலமாக பலானை கண்ணகை ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் அவ்வப்போது தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை உலகெங்கும் பரந்து வாழும் அடியார்கள் பார்த்துப் பயனடையலாம்.

மேலும் இவ் இணையத்தளமானது வெளிநாடுகளில் வாழுகின்ற அடியார்களதும் ஆலயத்திற்கு வரமுடியாதவர்களின் நன்மைகள் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணகை அம்மன் பக்தர்கள் எங்கிருந்தாலும் தாயவளின் அழகிய வதனத்தையும் அருட்கடாச்சத்ததையும் பெற்று சகல சிறப்புடன் நோயற்ற வாழ்வு வாழ பிராத்திப்போமாக.

ஆலய தரிசனம் கோடி புண்ணியம்
அம்மன் தரிசம் ஆத்ம புண்ணியம்.

அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2014

கண்ணகை அம்மன்  மெய்யடியார்களே! 
இலங்கை திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரின் கோவையம்பதி பலானை என்னும் Nஷத்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி பக்தர்களின் மனம் எனும் கருவறையில் சர்வ அலங்காரியாக ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து செங்கோல் ஆட்சி புரியும் கண்ணகை அம்பாளுக்கு நிகழும் ஜய வருடம் ஆடி மாதம் 15ம் நாள் (01-08-2014) தொடக்கம் ஆடி மாதம் 27ம் நாள் 12-08-2014 வரையான பன்னிரண்டு தினங்கள் உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகுடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து தாயின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.


உற்சவகால விபரம்
ஆடி 15ம் நாள் 30-07-2014 வியாழக்கிழமை மாலை 5.00மணி சாந்திக்கிரியைகள்
ஆடி16ம் நாள் 01-08-2014  வெள்ளிக்கிழமை 1ம் திருவிழா
ஆடி17ம் நாள் 02-08-2014 சனிக்கிழமை 2ம் திருவிழா
ஆடி18ம் நாள்  03-08-2014 ஞாயிற்றுக்கிழமை 3ம் திருவிழா
ஆடி19ம் நாள் 04-08-2014  திங்கட்கிழமை 4ம் திருவிழா
ஆடி20ம் நாள் 05-08-2014  செவ்வாய்க்கிழமை திருமஞ்சத்திருவிழா
ஆடி21ம் நாள்  06-08-2014  புதன்கிழமை 6ம் திருவிழா
ஆடி22ம் நாள்  07-08-2014  வியாழக்கிழமை 7ம் திருவிழா
ஆடி23ம் நாள்  08-08-2014  வெள்ளிக்கிழமை சப்பறத்திருவிழா
ஆடி24ம் நாள்  09-08-2014  சனிக்கிழமை இரதோற்சவம்
ஆடி25ம் நாள் 10-08-2014  ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவம்
ஆடி26ம் நாள் 11-08-2014 திங்கட்கிழமை சண்டேஸ்வரிதிருவிழா
ஆடி27ம் நாள்  12-08-2014 செவ்வாய்க்கிழமை பூங்காவனம்

மஹோற்சவ பிரதம குரு
வேதசிவாகம வித்யா பூஷணம் சிவாகமசெம்மல்
சிவஸ்ரீ வை.மு.பரம சண்முகராஜசிவாச்சாரியார்
(ஆலய ஸ்தானிககுரு முதல்வர், கோவையாதீனம்)

கோவையாதீன இளவரசுகள்
'சிவாகமபாஸ்கர'
பிரம்மஸ்ரீ ச.கௌரிசங்கரசுவாமிசர்மா
பிரம்மஸ்ரீ ச. இராஜசங்கரசர்மா

மங்கள வாத்தியம்:      இசைஞான கேசரி திரு. முருகையா முருகதாஸ் குழுவினர், இருபாலை.
பூமாலை அலங்காரம்: திரு. பூ.வரதராஜா, உரும்பிராய்.

*உற்சவ காலங்களில் பால், தயிர், இளநீர், பூ, பூமாலை ஆகிய பொருட்களை  ஆலயத்திற்கு வழங்கி அம்பாளின் அருளைப்  பெறுவீர்களாக!
*உற்சவ காலங்களில் குறிக்கப்பட்ட நேரங்களில் கிரியைகள் இடம் பெறும்.
        * ஈழத்தில் தலைசிறந்த தவில் நாதஸ்வர வித்துவான்கள் உற்சவ காலத்தில் கலந்து சிறப்பிப்பார்கள்.

அடியார்கள் குறிக்கப்பட்ட நேரத்திற்கு வருகைதந்து அம்பாளின் அருளை பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து நன்னியமடைவீர்களாக!

கண்ணகை அம்பாளை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!

கோப்பாய் பலானை கண்னகை அம்மன் கோவில்,
பரிபாலனசபை.



Share this article :

Post a Comment

 
பலானையில் வீற்றிருக்கின்ற அம்மனது ஆலயத்தின் வளர்ச்சிக்கு திருப்பணி நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் ஆலய நிர்வாக சபை பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
Copyright © 2014. kopay palanai kannakai amman kovil - All Rights Reserved